தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு:மத்திய அரசுக்கு சமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் பாராட்டு

0
493

தூய்மை தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டித்ததற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சமாஜிக் சமரஸ்தா மஞ்ச் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
“தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை திரு நரேந்திர மோடியின் அரசாங்கம் எடுத்துள்ளது. முந்தைய அரசாங்கம் ஆணையத்தின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கும், சில சமயங்களில் ஆறு மாதங்களுக்கும் நீட்டித்ததால், ஆணையத்தால் திறம்பட செயல்பட முடியவில்லை” என்று சமாஜிக் சமரஸ்தா மஞ்சின் அகில இந்திய அமைப்பாளர் ஸ்ரீ ஷியாம் பிரசாத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here