இந்திய மத்திய ஆசிய உச்சி மாநாடு

0
516

இந்திய மத்திய ஆசிய உச்சி மாநாடு வியாழன் அன்று துவங்கியது. இதில் பேசிய பிரதமர் பிரதேச ஸ்திர தன்மைக்கு ஒருங்கிணைப்பு அவசியம் என்று கூறினார்.
ஆன்லைன் மூலம் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்திய மத்திய ஆசிய நாடுகளின் உறவுகளை மேம்படுத்து பொருட்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் முதல்உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற டிசம்பரில் நடைபெற்ற இந்நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here