மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம்

0
389

புனே மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர், அதில் டிக்கெட் எடுத்து கொண்டு மாணவர்களுடன் பயணம் செய்தார்.

புனேயில் இரு வழித்தடங்களில் 32 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.11,400 கோடி. கடந்த 2016 டிச.,24 ல் பிரதமர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். அதில், முதல்கட்டமாக பணி முடிக்கப்பட்ட சுமார் 12 கி.மீ., தொலைவு கொண்ட மெட்ரோ ரயில்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

கர்வாரே மெட்ரோ ஸ்டேசன் இருந்து ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரயிலில் டிக்கெட் வாங்கி கொண்டு , பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து பயணம்செய்தார் அப்போது, அவர்களுடன் உரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here