குஜராத் எம்.எல்.ஏ., நள்ளிரவில் கைது

0
185

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.சமூக வலைதளத்தில் இரு சமூகங்களுக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் நோக்கத்திலும், பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அசாம் மாநில பா.ஜ., நிர்வாகி அருப் குமார் தேவ், கோக்ரஜ்ஹர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த கருத்தை சமூக வலைதளம் நீக்கிவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அசாம் போலீசார் மேவானியை நேற்று நள்ளிரவு கைது செய்து சாலை வழியாக ஆமதாபாத் அழைத்து வந்து, அங்கிருந்து விமானம் மூலம் அசாம் அழைத்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here