1993-ம் ஆண்டு சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்புசம்பவத்தில் 11 பேர் பலியாகினர், அதில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பிரம்ம புரம் பகுதியை சேர்ந்த குமரி பலன் என்பவரும் உயிரிழந்தார், இந்த தாக்குதல் நடந்த ஆகஸ்ட் 8 ம் தேதியை ஒவ்வெரு ஆண்டும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து முன்னணியினர் கடைபிடித்து வரும் நிலையில் இன்று குமரி பாலன் நினைவிடத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் ,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.