ஆர் எஸ் எஸ் இன் அகில பாரதிய சமன்வய பைட்டக் ராய்பூரில் நடைபெறும்

0
447

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பயிற்சியின் வாயிலாக சமுதாய வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த அதிகாரிகளின் சமன்வய பைட்டக் செப்டம்பர் 10 முதல் 12 2022 வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில பாரத அளவில் நடைபெறும் இந்த விரிவான சமன்வய பைட்டக் வருடத்திற்கு ஒருமுறை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைட்டக்கில் ஸர்சங்க சாலக் பூஜனிய டாக்டர் மோகன் பாகவத்ஜி , ஸர்காரியாஹ் மானனீய தத்தாத்ரேய ஹோஸ் பாலேஜி, சங்கத்தின் ஐந்து சக ஸர் காரியாவாஹ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஸ்ரீ ஹிரண்மய பாண்டேய, ஸ்ரீ பி சுரேந்திரன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்ரீ அலோக் குமார், ஸ்ரீ மிலிந்து பராண்டே, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் ஸ்ரீ ஆஷிஷ் சௌஹான், ஸ்ரீ நிதி திரிபாதி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு ஜே பி நட்டாஜி, ஸ்ரீ வி எல் சந்தோஷ், பாரதிய கிசான் சங்கத்தின் ஸ்ரீ தினேஷ் குல்கர்னி, வித்யா பாரதி அமைப்பின் ஸ்ரீ ராமகிருஷ்ணராவ், கோவிந்த மகந்தி, ராஷ்டிர சேவிகா சமிதியின் மானனீய சாந்தக்காஜி, ஸ்ரீ அன்னதானம் சீதாக்கா, வனவாசி கல்யாண ஆசிரமத்தின் ஸ்ரீ ராமச்சந்திர கராடி, ஸ்ரீ அதுல் ஜோக்ஜி, உட்பட 36 இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த பைட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here