மதரசா ஆசிரியருக்கு சாகும்வரை சிறை தண்டனை

0
144

கேரள மாநிலம் மலப்புரம், வழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மதரஸா ஆசிரியர், மனைவி வீட்டில் இல்லாத சூழலில் 14 வயதான தனது சொந்த மகளையே வீட்டில் பலமுறை கற்பழித்துள்ளார். தனக்கு அடிபணிந்து நடக்குமாறு அடித்து துன்புறுத்தியதுடன் தான் கொடுமைப்படுத்தியதை யாரிடமாவது தெரிவித்தால் தாயைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பள்ளி சென்ற சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை தெரிவித்தனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மஞ்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.6.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆசிரியர் தான் பணிபுரிந்த மதரசாவில் உள்ள மாணவ மாணவிகளை இதுபோல துன்புறுத்தியாரா என்பது குறித்து கேரள காவல்துறையினர் விசாரித்தார்களா என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, ஆகஸ்ட் 2021ல், அதே மஞ்சேரி நீதிமன்றம் தனது இரண்டு மைனர் மகள்களை பலமுறை பலாத்காரம் செய்ததற்காக 55 வயது மதரஸா ஆசிரியர் உஸ்தாத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருந்தது நினைவு கூரத்தக்கது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் பத்தாண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பல ஆண்டுகளாக பாலியல் பலாத்கார வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலமாக கேரளா உள்ளது தெரிய வருகிறது. தமிழகம் இதில் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here