சர்வதேச விண்வெளி ஆய்வு தொடர்பான மாநாட்டில் பிரதமருக்கு மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் புகழாரம்

0
133

காந்திநகரில் நடக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு தொடர்பான மாநாட்டில் சோம்நாத் பேசியது: கடந்த 6 மாதங்களின் இஸ்ரோவின் வெற்றிக்குப் பிறகு பிரதமர் எந்த மாதிரியான தொலைநோக்குப் பார்வையை அளித்தார் என்பதைப் பார்க்கிறேன். அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தது முதல் விண்வெளித் திட்டங்களுக்கு தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். பிரதமர், எங்களிடம் விண்வெளியில் மனிதர்கள் இருப்பதற்கான தொடர்ச்சியான செயல்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். ககன்யான் திட்டம் நம்மிடம் இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும். 2040க்குள் நிலவில் மனிதன் தரையிறங்க வேண்டும். ஆனால் அது வெகு தொலைவில் இல்லை; மிகவும் நெருக்கமாக உள்ளது. மேலும் 2035 க்குள் ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். இந்தியர்கள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்ய அணுகக்கூடிய ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு சோம்நாத் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here