அசாம்: கரீம்கஞ்சில் 1317 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

0
33

அசாம் மானிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மார்ச் 5 ஆம் தேதி திரிபுரா எல்லையில்  காவல்துறையினருக்கு நம்பகமான தகவல்களின் அடிப்படையில், கரீம்கஞ்ச் மாவட்ட போலீஸ் குழு மார்ச் 5 ஆம் தேதி அசாம்-திரிபுரா எல்லையில் உள்ள சுரைபாரி சோதனைச் சாவடியில் ஒரு லாரியை இடைமறித்தது என்று அவர்கள் தெரிவித்தனர். அப்போது, அந்த லாரியின் ரகசிய அறையில் இருந்து 439 பொட்டலங்களில் 1317 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனம் திரிபுரா பகுதியில் இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இரண்டு கைது செய்யப்பட்டவர்கள் பல்பீர் சிங் மற்றும் விஜய் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்., பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும் என்று கரீம்கஞ்ச் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காவல்துறையின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி சமூக ஊடக தளமான ‘x’ இல் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here