இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் மீனவர்கள்

0
3478

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில், மீனவர்கள் சிலர் இலங்கை மன்னார் – கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பலரை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் காங்கேசன் கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை ஆன 20 மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here