இரத்த தானம் செய்த மேட்டுபாளையம் ஸ்வயம்சேவகர்கள்

0
149

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறையை சமாளிக்க ஆர்எஸ்எஸ், சேவாபாரதி மூலம் இரத்த தான முகாம் நடந்தது.

பொதுவாக குரோனா கால சூல்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மூலம் இரத்த தானம் செய்ய முடியாத சூழ்நிலையால் மருத்துவமனைகளில் இரத்தம் இருப்பு குறைந்து வருகிறது. அதனை சமாளிக்க RSS, சேவாபாரதி மற்றும் பிரகதி அறக்கட்டளை சார்பாக நேற்று (17. 6. 2021) மேட்டுப்பாளையம் நகர் முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர் திரு சரவணன் தலைமையில் செவிலியர்கள் ரத்ததான முகாமை நடத்திக் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சேர்ந்த ஸ்வயம்சேவகர்கள் பங்குபெற்று ரத்ததான செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here